அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு

சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை, அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று, வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்தார். அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த அதிகாரியான லெப்.கொமாண்டர் பிரையன் பேஜும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இந்தச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் இராணுவ, கடற்படை, மற்றும் விமானப்படை பாதுகாப்பு ஆலோசகரான கேணல் சூ ஜியன்வெய் நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பரந்துபட்ட விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்