புதிய அரசமைப்புக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள வெளிச்சம் (எலிய) அமைப்பின் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த அழைப்பை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் நிராக ரித்துள்ளனர்.
அந்த அமைப்பின் முதலாவது கூட்டம் அண்மையில் பொரலஸ்கமுவவில் நடைபெற்றது. இதன் அடுத்த கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. தனது அமைப்பின் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கோத்தபாய ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அரசமைப்புக்கு எதிரான இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்கத் தீர்மானித் துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள், இது இனவாத அடிப்படையில் செயற்படும் அமைப்பாக இருப்பதால் அதில் கலந்துகொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.