முருகானந்தா கல்லூரியில் தீ விபத்து – கணினிகள், தளபாடங்கள் நாசம்!

கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் கணினிகள், உட்படப் பல உபகரணங்கள் நாசமாகியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

அங்குள்ள மகிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்பு சாதன தொழில்நுட்ப மத்திய நிலையத்திலேயே தீ பரவியது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தீயைப் பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கணினி, குளுரூட்டி (ஏசி), தளபாடங்கள் என்பன சேதமடைந்தன என்று தெரிவிக்கப்பட்டது.

தீ பரவியமைக்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்