கைதான இந்திய மீனவர்கள் இன்று நீதிமன்றில்

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் நேற்று இரவு இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இரு இழுவைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறைக் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் இன்று யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைதானவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்