யாழ்.வரணியில் வீடொன்றின் மீது மர்ம நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று செவ்வாய்க் கிழமை அதிகாலை 12.40 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத மர்ம நபர்கள் மேற்கொண்ட இத் தாக்குதலின் போது வீசப்பட்ட மூன்று பெற்றோல் குண்டுகள் குறித்த வீட்டின் படுக்கை அறைக்கு அருகில் விழுந்து வெடித்துள்ளது.

இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை. இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை வீட்டின் உரிமையாளர் இனங்காட்டியுள்ளார்.

பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதாக இனம்காட்டப்பட்டவர் அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டுக்குழுக்களை சேர்ந்தவர் என்றும் இவருடைய மோட்டார் சைக்கிள் கோப்பாய் பொலிசாரால் பறிமுதல் செய்யபட்டதாகவும் அறிய முடிகிறது.

குறித்த பகுதியைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரின் முறைகேடுகளை அப்பகுதி இளைஞர்கள் அம்பலப்படுத்தியிருந்த நிலையில் அந்த குழுவில் இணைந்து செயற்பட்ட இளைஞர் ஒருவரின் தந்தையின் வீட்டின் மீதே பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம்பொலிசார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்