தமிழரசு கட்சியை ஈ.பி.ஆர்.எல்.எவ். எதிர்க்கும் !

20வது திருத்தச்சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20வது திருத்தச்சட்டத்தை ஆதரிக்கபோவதாக தமிழரசு கட்சியின ர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையுமெனவும் இதற்கு எதிரான நிலைப்பாட்டை தமது கட்சி எடுக்கும் எனவும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலை வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

நேற்று சுரேஸ் பிறேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். சந்திப்பில் மேலும் அவர் கூறுகையில், நேற்றய தினம்( நேற்று முன்தினம்) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 20 வது திருத்தச்சட்டத்தை தாம் ஆதரிக்கப்போவதாக கூறியிருக்;கின்றார். அதற்கு அவர் கூறியிருந்த முக்கி யமான காரணம் 20வது திருத்தச்சட்டத்தில் தாங்கள் கூறியிருந்த சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதேயாகும்.

அதாவது 20வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடப்பட்டி ருக்கும் நிலையில் மேற்படி 20வது திருத்தச்சட்டத்தில் அரசாங்கம் செய்யவுள்ளதாக கூறப்படும் சில திரு த்தங்களை சட்டமா அதிபர் நீதிமன்றில் கூறியுள்ளார். அந்த திருத்தங்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆதரவை வழங்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைக்கின்றது. இதன்படி இலங்கையில் எதாவது ஒரு மாகாணசபை உரிய காலத்திற்கு முன்ன ர் கலைக்கப்பட்டால் மிகுதி காலம் 18 மாதங்களுக்கு அதிகமாக இருந்தால் இடைத்தேர்தலை நடத்துவ தென்பது ஒரு திருத்தமாம். நாங்கள் கேட்கிறோம் மிகுதி சொற்ப காலத்திற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு யார் வருவார்கள்? எவரும் வரமாட்டார்கள் காரணம் பெருமளவு பணம் தேவைப்படும் இது ஒரு புறமிருக்க

18 மாதங்களுக்கு குறைவாக மாகாணசபையின் மிகுதி காலம் இருந்தால் அந்த காலப்பகுதி க்கான ஆட்சி ஆளுநரிடம் கையளிக்கப்படும் என்பது. நாங்கள் கேட்கிறோம் இந்த 18 மாதங்களின் ஆ ட்சியை ஆளுநரிடம் வழங்கினால் குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற ங்கள் கொண்டுவரப்படும், பௌத்த மயமாக்கல் சுதந்திரமாக நடக்கும், அரச திணைக்களங்களில் அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் களமிறக்கப்படுவார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கு பாதகமான பல செயற்பாடுகளை அரசாங்கம் செய்யும். எனவே இவ்வாறான நிலையில் 20வது திருத்தச்சட்டத்தை ஆதரிப்பதை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் 18 மாதங்களுக்கு அதிகமான காலம் உள் ள நிலையில் மாகாணசபை கலைக்கப்பட்டால் இடைத்தேர்தல் நடத்துவதென்ற தீர்மானம். சிறீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கியதேசிய கட்சி, தமிழரசு கட்சி போன்ற பெரிய கட்சிகளுக்கு மட்டுமே பொருத்தமா னதாக அமையும்.

அவ்வாறான நிலையில் பெரிய கட்சிகளின் இருப்பை நிலை நிறுத்தவே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே 20வது திருத்தச்சட்டத்தை ஆதரிக்கிறோம் என கூறும் சம்மந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் கவனத்தில் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு கவனத்தில் கொள்ளாமல் தீர்மா னம் எடுத்திருப்பது ஜனநாயகம், அதிகார பகிர்வு பற்றி பேசகூடியவர்களுக்கு அழகானது அல்ல. இதே போல் கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்;சி நன்கு திட்டமிட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறி க்கொண்டு 20வது திருத்தச்சட்டத்தை அங்கீகரிக்க வைத்திருக்கின்றது.

இது அநாகரிகமான விடயமாகும். திருத்தங்கள் செய்யப்படும் என உயர் நீதிமன்றில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் கூறப்படவில்லை. நாடாளுமன்றில் கூறப்பட்ட பின்னர் என்ன பிரச்சினைகள் வரும் என எவருக்கும் தெரியாது. இவ்வாறான நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது ஆதரிக்கிறோம் என கூறுவது மிக வன்மையாக கண்டிக்கவேண்டிய ஒரு விடயமாக உள்ளது. எனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், படாவிட்டாலும் 20வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்கள் எதிர்க்கவேண்டும், நிராகரிக்கவேண்டும். மேலும் 20 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. தமிழ் மக்களுக்கு விரோதமானதொரு முடிவை தான்தோன்றித்தனமாக தன்னிச்சையாகவே எவ்வாறு எடுக்கப்பட்டது. எனவே அந்த முடிவை மீள் பரீசீலனை செய்வதுடன் பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தம் வருகின்ற போது அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கக் கூடாது. இருந்தும் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி ஆதரவை வெளிப்படுத்தினாலும் ஈபிஆர்எல்எப் அதனை எதிர்த்தே வாக்களிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

புதிய அரசிலமைப்பின் இடைக்கால அறிக்கை முன்னர் வெளிவர இருந்ததாகவும் சில பல காரணங்களால் அது இந்த மாதத்திற்குள் வெளிவர இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கின்றார். அவர் அரசாங்கம் சார்பாக பேசுகிறாரா, தமிழரசுக் கட்சி சார்பாக பேசுகிறாரா, அவர் யாருடைய பிரதிநிதியாக யாருடைய பேச்சாளராகப் பேசுகிறார் என்பது எனக்குத் தெரியாது. இந்த அறிக்கை தொடர்பாக பிரதான இரு கட்சிகள் உட்பட பல கட்சிகளும் விவாதம் நடத்தியிருக்கின்றது. ஆனால் தமிழ்த் சேதியக் கூட்டமைப்பு அப்படியொரு விவாதத்தை நடத்தவில்லை. இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கின்ற போது அரசுடனோ அல்லது வழிநடத்தல் குழுவிலோ சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசப்படவில்லை. இதனை அரசாங்கத்தினரே வெளிப்படையாகவும் கூறியிருக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் இடைக்கால அறிக்கைக்கு ஒரு பின் இணைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று குறிப்பிட்டு தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிகக் கூடிய சம்ந்தன் சுமந்திரன் இணைந்து ஒரு பின்இணைப்பை கொடுத்திருக்கின்றனர். அதில் சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு, மதச்சார்பற்ற நாடு வேண்,டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது யாரை ஏமாற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கோருவதாக இருந்தால் வழிநடத்தல் குழுவில் ஏன் அதனை வெளிப்படுத்தவில்லை. அரசுடன் ஏன் இது குறித்து பேசப்படவில்லை. இதற்கான முடிவு எட்டப்படவில்லை. இவ்வாறன நிலைமைகள் இருக்க இப்போது இந்த விடயங்களை உள்ளடக்கி பின்இணைப்பைக் கொடுக்க வேண்டியதற்கான காரணம் என்ன? அதாவது மேற்படி எல்லா விடயங்களையும் நாங்கள் கொடுத்தோம் அரசாங்கம் ஏற்கவில்லை என்று சொல்வதற்காகவா அத்தோடு தமிழ் மக்களை ஏமாற்றவா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் பின்னினைப்பை வெளியிட்டுள்ளவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக என்றும் இந்த பின்னினைப்பில் குறிப்பிடப்பட்டள்ள விடயங்கள் அரசாங்கத்துடனோ வழிகாட்டல் குழுவிலோ பேசப்படவில்லை என்பது தான் உண்மையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலைமையில் சம்மந்தனைப் பொறுத்தவரையில் ஐ.நா சபைக்கு கடிதம் எழுதுகின்றதொரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதாவது இந்த அரசாங்கம் அரசியலமைப்பு உருவாக்கத்தில் காலம் கடத்துகிறது. ஆகவே அதனை கொண்டு வருவதற்கு நிங்கள் ஒத்தாசையாக இருக்க வேண்டும் வருகிறவர்கள் போகிறவர்களுடன் பேசத் தொடங்கியிருக்கிறார். என சுரேஸ்பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்