தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நினைவேந்தல் குழுவைச் சேர்ந்த திரு சு.சுதாகரன் அவர்கள் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து வைத்தார்.தொடர்ந்து பொது மக்கள் மலர் வணக்கம் செலுத்தினர். உயிர்த்தியாகம் செய்த மாவீரர்கள் மக்களுக்கு 2 நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.