கடந்த 14.09.2017 அன்று பாடசாலை முதன்மை மண்டகத்தில், பாடசாலை சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட ‘மருதமௌலி’ நூல் வெளியீட்டுவிழாவானது, பாடசாலை முதல்வர் திருமதி இ.கலைவாணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மதிப்புறு இ.சாள்சு நிர்மலநாதன் மற்றும் மதிப்புறு சாந்தி சிறிற்கந்தராசா ஆகியோருடன் வட மாகாணசபை உறுப்பினர்களான மதிப்புறு சு.பசுபதிப்பிள்ளை மற்றும் மதிப்புறு து.ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் அயற்பாடசாலை முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலையில் பலவிதத்திலும் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு பரிசில் வழங்கி சிறப்பிக்கப்பட்டத. மாணவர்களுக்கு விருந்தினர்கள் பரிசில்களை வளங்கி சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.