சிறிலங்கா அரசு ஒரு குற்றவாளி : மைத்திரியின் ஐ.நா உரைக்கு எதிராக மக்கள் போராட்டம் !

சிறிலங்கா அரசாங்கம் ஒரு குற்றவாளி என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா அரசுத் தலைவர் மைத்திரியின் ஐ.நா உரைக்கு எதிரான மக்கள் போராட்டமொன்று நியு யோர்க்கில் இடம்பெற இருக்கின்றது.

ஐ.நா பொதுச்சபையின் வருடாந்தக் பொதுக்கூட்டத்தில் பங்கெடுக்கும் சிறிலங்காவின் அரசுத் தலைவர், எதிர்வரும் 19ம் திகதியன்று உரை நிகழ்த்த இருக்கின்றார்.

இந்நிலையில், மைத்திரின் உரை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சமவேளை, சிறிலங்கா அரசினை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவம் வகையில் மக்கள் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இப்போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுத்து அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசு ஒரு குற்றவாளி என்ற தொனிப்பொருளில் அதன் குற்றங்களை பட்டியலிட இருக்கின்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்