அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தைக் கைவிட்டால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருப்பதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
‘‘விரைவில் அந்தத் தேர்தல் நடத்தப்படுவது நல்லது என்றே நினைக்கின்றோம்’’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
‘‘2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் குளறுபடிகள், – மோசடிகள் நடைபெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆசனங்களை இழந்தது. இப்போது தேர்தல் நடைபெற்றால், அவ்வாறான குளறுபடிகள் – மோசடிகள் நடைபெறாது என்றே எதிர்பார்கின்றோம்’’ -என்றார்.