கேப்­பா­ப்பு­லவு மக்கள் போராட்டம் 200 நாட்களை கடந்தது!

கேப்­பா­ப்பு­லவில் இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­துள்ள தமது காணி­களை விடு­விக்கக் கோரி கேப்­பா­ப்பு­லவு மக்கள் மேற்­கொண்டு வரும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் 200 நாட்­களைக் கடந்­து­விட்­டது.

201 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடை­பெ­று­வ­தா­கவும் விரைவில் வன்னி மற்றும் யாழ். மாவட்டப் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வர­வ­ழைத்து பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்றை மேற்­கொள்ள கேப்­பா­ப்பு­லவு மக்கள் தீர்­மா­னித்­துள்­ள­தாக போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் திரு­மதி சந்­தி­ர­லீலா நேற்று தெரி­வித்தார்.

இதே­வேளை, பிரஜா அபி­லாஷா கைகோர்க்கும் வளை­ய­மைப்பு அத­னுடன் இணைந்து 22 பங்­காளர் அமைப்­பு­களும் கேப்­பா­ப்பு­லவில் இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­துள்ள மக்­களின் பாரம்­ப­ரிய காணி­களை விடு­வித்து மீண்டும் மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கும்­படி அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளன.

தென்­ப­கு­தியைச் சேர்ந்த இந்த அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்