ஆண் நண்பர்களுடன் பழக்கம்… 13 வயது சிறுமியை எரித்துக் கொன்ற பெற்றோர்

தெலங்கானா மாநிலத்தில் ஆண் நண்பர்களுடன் அதிகம் பழகியதால் 13 வயது சிறுமியை அவர்களது பெற்றோர்களே எரித்துக் கொலை செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் நல்கோண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சிறுமியைக் காணவில்லை என்ற புகாரை அடுத்து போலீசார் தேடியதில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது அந்த 13 வயது சிறுமி அவளது ஆண் ஆசிரியர் மற்றும் அவருடன் படிக்கும் வகுப்பு நண்பர்களுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளாள். இதை அறிந்து கொண்ட அவளது பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். ஆனால், அந்த சிறுமி மீண்டும் தனது நண்பர்களுடன் பழகியதால், ஆத்திரமடைந்த பெற்றோர் அவளை எரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக போலீசார் விசாரித்த போது அந்தச் சிறுமி தற்கொலைக்கு முயன்றாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்