சுமந்திரன் மீதான கொலை முயற்சி சந்தேக நபர்கள் விடுவிப்பு!

பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்ட விரோதமாக ஆயுதங்கள், போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி, பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் ஜவர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு இருந்தது.

இதன்படி சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டிருந்தார்.

சந்தேகநபர்கள் ஐவரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 09 ம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுமந்திரன் மீதான கொலை முயற்சியுடன் சம்மந்தப்பட்ட, குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் யாழ்.மேல் நீதிமன்றால் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்