மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியை சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடி படகு உரிமையாளர் ஒருவருக்கு இரண்டாயிரம் கிலோவிற்கும் மேற்பட்ட சுறா மீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக கடலில் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) கரைக்கு திரும்பிய படகு உரிமையாளருக்கு அதிகளவான சுறா மீன்களும், ஒரு தொகை சிறு மீன்களும் பிடிப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்றைய விலை நிலவரப்படி பிடிபட்ட சுறாமீன்களின் பெறுமதி பத்து இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.