யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .
கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கினை குறித்த மாணவரிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றப்பட்டுள்ளனர். மானிப்பாய் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மாணவரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.