சுவிஸ் தூதரகப் பிரதிநிதிகளுக்கும், சனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு, திருகோணமலையிலுள்ள சனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது தீர்வுக்கான முனைப்புகள், சமாதான சகவாழ்வியல் தொடர்பில் நிலையான நிரந்தரமான முடிவுகள் ஏற்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களைத் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்படவேண் டும் என்று சனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.