காதலன் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்திய காதலி – நடந்தது என்ன?

தனது காதலனால் தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடொன்றை மேற்கொண்ட யுவதியொருவர் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
அண்மையில் தான் தனது காதனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து குறித்த யுவதி நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் காதலனிடம் விசாரித்த போது அப்படியொன்றும் தான் செய்யவில்லையென தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குறித்த யுவதியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கான எந்த ஆதாரமும் இருக்கவில்லையென தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த யுவதியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது தனது காதலன் வேறு பெண்ணொருவரை திருமணம் முடிக்க தயாரான காரணத்தினால் தான் அவ்வாறு முறைப்பாடு செய்ததாகவும் தான் காதலனுடன் வாழவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொய்யான முறைப்பாட்டை மேற்கொண்ட குற்றத்திற்காக பொலிஸார் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை வேறு பெண்ணை திருமணம் முடிக்க முயற்சித்த இளைஞன் பின்னர் தனது காதலியை திருமணம் முடிக்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்