கொழும்பில் நில அதிர்வா? வெளியேறிய மக்கள்!

கொழும்பிலுள்ள 6 மாடிக் கட்டிடமொன்றில் இருந்த மக்கள் இன்றைய தினம் அவசர அறிவிப்பின் பின்னர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டிடம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக கட்டிட ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு – கொம்பனித்தெரு வீதியிலுள்ள 6 மாடிக் கட்டிடம் அசைவதாக அந்தக் கட்டிடத்தில் இருக்கின்றவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அவசர அறிவிப்பின் பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டிடத்திற்கு அடியில் காணப்படுகின்ற மின்சார விநியோக மார்க்கத்தில் மேற்கொள்ளப்படுகின்ற திருத்தப் பணிகள் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்