சிவராம் படுகொலை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! – சிவாஜிலிங்கம்

ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

‘ ஊடகவியலாளர் சிவராம் இல்லையெனில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை. சிவராம் படுகொலையுடன் தொடர்பான வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த படுகொலையுடன் தொடர்புடையவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்