வற்றாப்பளையில் கைக்குண்டு மீட்பு

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வற்றாப்பளை பகுதியில் வறட்சி நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த மக்களால் நேற்று மாலை கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்,

நீதிமன்றத்தின் அனுமதியுடன் கைக்குண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

முள்ளியவளை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்