ஜேர்மனியில் அதிபர் தேர்தல்….வெற்றி யாருக்கு?

ஜெர்மனியில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில் வெற்றி யாருக்கு என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெர்மனியில் அதிபர் பதவிக்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போது அதிபராக உள்ள ஏஞ்சலா மெர்கலின் 4 ஆண்டு பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், ஜெர்மனியின் அதிபர் பதிவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 8 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியளவில் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் தற்போதைய அதிபரான ஏஞ்சலா மெர்கலும், அவரை எதிர்த்து சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஸ்கல்ஸும் போட்டியிடுகின்றனர். ஏஞ்சலா மெர்கல் இதற்கு முன் 3 முறை அதிபராக இருந்துள்ளார். இந்நிலையில் தற்போதைய தேர்தலிலும் அவரே பெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்