கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற மீனவர் நெஞ்சுவலி ஏற்பட்டு படகில் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
குருநகரைச் சேர்ந்த டி. தர்மராசா (வயது – 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். அவர் 4 பிள்ளைகளின் தந்தை.
நண்பர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் இரவு படகில் தொழிலுக்குச் சென்று நேற்றுக்காலை கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் பின்னர் மயங்கிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கரையை அடைந்ததும் உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ சோதனையில் தெரிவிக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது