வடமராட்சியில் 17 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

பருத்தித்துறை – வியாபார மூலைப் பகுதியில் ஒருதொகைக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

27 வயதுடைய இளைஞர் ஒருவரே 17 கிலோ கஞ்சாவுடன் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பிரியந்தவின் வழிகாட்டுதலில் பருத்தித்துறைப் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்