யோஷித்தவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஓக்டோபர் மாத 12 ஆம் திகதி வரை இரண்டு வாரங்கள் இத்தாலி செல்வதற்கு கொழும்பு மேல் நீதின்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

தனிப்பட்ட விஜயத்திற்காக இத்தாலி செல்வதற்கு அனுமதி வழங்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த அனுமதியை வழங்கிய மேல் நீதிமன்றம், கடுவலை நீதவானுக்கு இதனை அறிவித்து கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கும், அரசாங்க புலனாய்வு பிரிவிற்கும் அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சி.எஸ்.என் தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பதற்கு எவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்தாமை காரணமாக யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகிறது.

அவர் இது குறித்து மேல் நீதிமன்றத்தில் பிணை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்