தமிழ் தேசிய கூட்டமைப்பினை பாராட்டிய நாமல்!

கூட்டமைப்பில் இருந்து கொண்டும் கொள்கையில் உறுதியாக இருக்கும் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவருக்கும் கட்சி பேதமின்றி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் நாமல்ராஜபக்ஸ.

மாகாணசபைகளது அதிகாரங்களை பிடுங்கும் 20வது திருத்தச்சட்டத்தின் போது நாடாளுமன்றினில் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களிப்பினை புறக்கணித்தும் இவர்கள் இருவருமே செயற்பட்டிருந்தனர்.

ஏனைய தமிழரசுக்கட்சியினர் ஆதரவு தெரிவித்தும் இன்னும் பதுங்கியிருந்தும் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இதேவேளை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 20வது திருத்தச்சட்டத்தை எதிர்த்ததையடுத்து வியாழேந்திரனை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தாக்கமுற்பட்டமை தெரிந்ததே.

About இலக்கியன்

மறுமொழி இடவும்