மன்னார் – மாந்தை – திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை இன்று திறந்துவைப்பதற்காக மன்னாரிற்கு விஜயம் செய்யவிருந்த மைத்திரி நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
மைத்திரியின் இந்த விஜயம் தொடர்பாக பல்வேறு நபர்களினால் அதிருப்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
மன்னார் – மாந்தை – திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனியாருக்கு சொந்தமான காணியை அபகரித்து பௌத்த விகாரை அமைப்பது நல்லாட்சியா என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மைத்திரிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது