வவுனியா போரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வவுனியா போதை ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குருணாகல், கல்கமுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கிளிநொச்சியிலிருந்து அனுராதபுரம் பகுதிக்கு கஞ்சா வினை பேருந்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட வேளை வவுனியாவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 2 கிலோ நிறையுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினரே குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தமுத்தேகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும், விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்