அனிதா குடும்பத்துக்கு டிடிவி.தினகரன் 15 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பை படிக்க இயலாத காரணத்தினால், தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “மாணவி அனிதாவின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக சென்றுக்கொண்டிருக்கிறேன். மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் எங்கள் தரப்பில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளோம். கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய 3 நாட்கள் அவகாசமும் கேட்டுள்ளோம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை நடுநிலையாக இருக்கும் என்று நம்புகிறோம். கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்தை மீட்போம்” என்று தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்