கேப்பாபுலவு மக்களின் போராட்ட களத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

கேப்பாபுலவு பூர்வீக மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியோர் போராட்ட இடத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி அக்கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்று போராட்ட இடத்திற்கு சென்ற சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் மற்றும் கலைமதி கிராம மக்கள் தம்மை போன்று கேப்பாபுலவு மக்களுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

மக்களின் போராட்ட இடத்தை பார்க்கின்றபோது மிகவும் வேதனையடைவதாகவும் இதன்போது சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் குறிப்பிட்டனர்.

சொந்த நிலத்தையும், கடல் வளத்தையும் இழந்துள்ள மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

தமது காணி விடுவிப்பு தொடர்பில் உரிய தீர்வொன்றை முன்வைக்கும்வரை தாம் போராட்டத்தை கைவிடப்போதில்லை எனவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்