சாவகச்சேரியில் சேதனப் பசளை இனந்தெரியாதோரால் தீக்கிரை

சாவகச்சேரி நகரசபையால் தயா ரிக்கப்பட்ட பெருமளவு சேதனப் பசளை நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரயாக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

திண்மக்கழிபைப் பசளையாக்கும் திட்டத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பசளையே இவ்வாறு நாசமாக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபையினர் வட்டாரங்க ளில் திண்மக்கழிவுப் பொருள்களைச் சேகரித்தனர். அவற்றைத் தரம்பிரித்து, உக்கக்கூடிய குப்பைகளை பசளை யாக்கினர். இவற்றைக் காலபோக நெற்செய்கையாளர்களுக்கு விற்பதற்கென குவியல் குவியலாக வைத்திருந்தனர்.

அவ்வாறு வைக்கப்பட்டிருந்த பசளைக் குவியல்களே விசமிகளால் எரி யூட்டப்பட்டன.
கண்ணாடிப்பிட்டித் திடலில் சேதனப்பசளை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சேதனப் பசளையைக் கொள்வனவு செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்