காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் மன்னாரில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இன்று (சனிக்கிழமை) மாலை மன்னார் ஆயர் இல்லத்திலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ். மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைப்பாடு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.