மூதூரில் தமிழ் விவசாயிமீது சிங்களவர்கள் தாக்குதல்!

மூதூர் பாடுகாட்டு பகுதியில் இன்று தனக்கு சொந்தமான வயலில்மூதூர் பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் சிவகுமார் என்ற விவசாயி சக விவசாயி இருவருடன் நின்றவேளை அங்கு சென்ற நீலாபொல கிராமத்தை சேர்ந்தவர்கள் ஊர்காவல் படைவீரர் சகிதம் ஏழு பேருக்குமேற்பட்டோர்களால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

அவருக்கு மேலும் உடல்முழுவதும் தடிகளாலும் கல்களாலும் தாக்கிய உட்காயங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது மற்றைய இருவரும் சிறு காயங்களுடன் தப்பிக்கொண்டனர்.

மேலும் சற்று அருகாமையில் நின்ற மூதூரைச் சேர்ந்த இரு முஸ்லீம் விசாயிகளும் தாக்கப்பட்டு அவர்களும் மூதூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயமாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இருந்தும் தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் இந்த நேரம் வரை பொலிசாரால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்