முல்லைத்தீவு – முத்தையன்கட்டு, தட்டையர்மலை பகுதியில் மேச்சலுக்காக கட்டிய மாட்டை அவிழ்க்கச் சென்ற குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாடு கட்டப்பட்டிருந்த அலவாங்கு நெஞ்சில் தாக்கி குறித்த பெண் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தேவராஜா இந்திராணி (வயது 65) என்பவரே உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெஞ்சுப் பகுதியில் அலவாங்கு கடுமையாக தாக்கியுள்ள நிலையில் அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.
அலவாங்கில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்கும் போது மாடு இழுத்ததினால் அலவாங்கு அந்தப் பெண்ணின் நெஞ்சில் பாய்ந்ததாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.