வவுனியா பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது!

வவுனியா பேருந்து நிலையத்தில் அரச அனுமதியற்ற சட்டவிரோத புகையிலை பெட்டிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே நேற்று (சனிக்கிழமை) இரவு குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு உப பரிசோதகர் டே.திணேஸ் தலைமையின் கீழ் பொலிஸ் சார்ஜன்ட் அனுர, பொலிஸ் உத்தியோகத்தர்களான கீர்த்தி, குமார ஆகியோர் அடங்கிய குழுவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சட்ட விரோதமான 800 புகையிலை சுருள்கள் அடக்கிய 40 புகையிலை பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொண்டுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்