யாழில் வாள் வெட்டு குழுவினர் அடாவடி! (காணோளி)

யாழ். கொக்குவில் சந்தி பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் நுழைந்த வாள் வெட்டுக்கும்பல் கடையில் இருந்த பொருட்களை அடித்து நெருக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த கும்பல் கடைக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

https://www.facebook.com/EeladhesamNews/videos/1551442988249122/

அது தொடர்பில் சம்பவ இடத்தில் நின்ற ஒருவர் தெரிவிக்கையில் ,

கொக்குவில் சந்தி பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழுவினர் சந்தியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கி நடந்து அருகில் உள்ள கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்தனர்.

பின்னர் வெளியில் வந்து கடைக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெறுமதி மிக்க மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று உள்ளனர் என தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கடைஉரிமையாளர் யாழ்.காவல் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்