இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி,எழுத்தூர் பகுதியிலேயே மேற்படி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து புதிய அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளநிலையில் சிங்கக்கொடி சம்பந்தன் தரப்பினர் தமிழரசுக் கட்சியை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.