துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த, சுதர்மாராம வீதியிலுள்ள வீடொன்றின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) இரவு 10.10 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் கட்டுபெத்த, சுதர்மாராம வீதியில் வசிக்கும் 28 வயதான முணசிங்க திலிப பத்மன் எனும் இளைஞர் படுகாயத்திற்குள்ளாகி, பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவர், உள்நாட்டு ‘கல்கட்டஸ்’ வகை துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்