இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் இன்று இலங்கை வரவுள்ளார்.
இவர் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளார்.
இந்தச்சந்திப்பு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெறவுள்ளது.
ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான வெளிவிவகாரப் பணியகத்தின் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கைக்கு பயணம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.