அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் மக்கள் சிறீலங்கா அரசை இனிமேலும் நம்பமுடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசை காப்பாற்ற அமெரிக்கா சென்றுள்ள சுமந்திரன் சிங்கள அரசுக்கு ஆதரவாக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.