காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்தார் மார்க் பீல்ட்

வடக்கு மாகாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தாம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டும் இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என எடுத்து கூறினர்.

இதன் போது காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களையும் மார்க் பீல்ட்டு உள்ளிட்ட குழுவினரிடம் அவர்கள் காண்பித்தாக எமது செய்தியாளர் கூறினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்