28 வயதுடைய பெண் ஒருவர் கைது!

சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து தங்க நகைகள் மற்றும் ஏ டி எம் அட்டை ஒன்றை திருடி 12 லட்சம் ரூபாய் பணத் தொகையினை திருடியுள்ள பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டின் உரிமையாளர் காவற்துறையில் வழங்கிய முறைப்பாடு ஒன்றுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் பணி புரிந்து வந்துள்ள பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடிய தங்க நகைகள் மற்றும் பணத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

28 வயதுடைய சிலாப பிரதேசத்தினை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்