தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.

அநுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேற்று சந்தித்ததின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கடந்த 1960 மற்றும் 80 களில் ஜேவிபியினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

அரசியல் கைதிகள் கடந்த பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அத்தகைய பொதுமன்னிப்பொன்று வழங்கப்பட வேண்டும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தீவிரவாத ஒழிப்புச் சட்டம் நீக்கப்படும்பட்சத்தில் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுவதாகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்