வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சிற்கான நிதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லையென வடமாகாண மகளீர் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த அமைச்சானது வெறும் எழுத்தளவில் மாத்திரமே உள்ளதாக தெரிவித்த அவர், அமைச்சிற்கான ஆளணி பற்றாக்குறைகளும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகான மகளிர் விவகார அமைச்சர் என்ற வகையில் என்ன நடவடிக்கை எடுத்துவருகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.