தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கபப்படுகிறது.

இன்று காலை யாழ் மையப் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு ஒறுப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உடனடியாகத் தீர்வு காணப்படாத பட்சத்தில் வடக்கு அரச தலைவர் வர முடியாதவாறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்