காதல் விவகாரம்: வல்லைவெளியில் இளைஞனுக்குத் தர்ம அடி

காதல் திரு­ம­ணம் செய்­தி­ருந்த இளை­ஞ­னும் பெண்­ணும் தந்­தி­ர­மாக அழைத்­துச் செல்­லப்­பட்டு, வட­ம­ராட்சி வல்­லை­வெ­ளி­யில் வைத்து இளை­ஞன் தாக்­கப்­பட்­டார்.

பெண்­வீட்­டா­ரால் குறித்த பெண் அழைத்­துச் செல்­லப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இளை­ஞன் காய­ம­டைந்து மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார் என்று அவ­ரது உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது.

அச்­சு­வே­லிப் பகு­தி­யில் வசிக்­கும் 24 வய­து­டைய இளை­ஞன் அச்­சு­வேலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பிர­தே­சத்­தைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ரும் கடந்த முத­லாம் திகதி வீட்­டி­லி­ருந்து புறப்­பட்­டுச் சென்­று­விட்­ட­னர் என்று கூறப்­ப­டு­கி­றது.

நேற்­று­முன்­தி­னம் வலி.கிழக்­கி­லுள்ள விவா­கப் பதி­வா­ளர் ஒரு­வ­ரி­டம் இரு­வ­ரும் சென்று பதி­வுத் திரு­ம­ணம் செய்­து­த­ரு­மாறு கோர பதி­வா­ளர் அவர்­க­ளுக்­குப் பதி­வுத் திரு­ம­ணம் செய்­து­விட்­டார்.

இரு­வ­ரும் குடத்­த­னை­யில் இருப்­ப­தை அறிந்த பெண்­ணின் உற­வுக்­கா­ரர் திரு­ம­ணத்­துக்­குச் சம்­ம­திப்­ப­தா­கக்­கூறி இரு­வ­ரும் தங்­கி­யி­ருந்த குடத்­த­னைக்­குச் சென்­றுள்­ள­னர்.

குறித்த பெண் காணா­மல் போனமை தொடர்­பான முறைப்­பாடு ஒன்று அச்­சு­வேலி பொலிஸ் நிலை­யத்­தில் கடந்த வாரம் பெண் வீட்­டுக்­கா­ர­ரால் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அந்த முறைப்­பாட்டை மீளப் பெற­வேண்­டும் என்று இரு­வ­ருக்­கும் கூறி­யுள்­ள­னர். அவர்­கள் சம்­ம­தித்­த­தும் இரு­வ­ரும் ஓட்­டோ­வி­லும் பெண் வீட்­டுக்­கா­ரர் ஹைஏஸ் வாக­னத்­தி­லு­மாக அச்­சு­வே­லிப் பொலிஸ் நிலை­யத்­துக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­த­னர்.

வல்­லை­வெ­ளி­யில் திடீ­ரென ஓட்­டோவை தடுத்து நிறுத்­தி­யது ஹைஏஸ். அதி­லி­ருந்து இறங்­கி­ய­வர்­கள் இளை­ஞ­னைத் தாக்­கி­விட்டு பெண்ணைத் தமது வாக­னத்­தில் ஏற்­றிக் கொண்டு சென்றுவிட்டனர் என்று இளை­ஞ­னின் உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது.

இளை­ஞ­னைத் தாக்­கி­விட்டு பெண்­ணைக் கடத்­திச் சென்­ற­தா­கத் தற்­போது அச்­சு­வேலி பொலிஸ் நிலை­யத்­தில் முறை­ யி­டப்­பட்­டுள்­ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்