அமெரிக்காவில், வாஷிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் போலீசார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாதாக, ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பல்கலைகழகத்திற்கு அருகில் குடியிருக்கும் உள்ளூர்வாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.