சிங்கள ராவய தலைவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

மியன்மார் ரோஹிங்யா அகதிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அக்மீமண தயாரத்ன தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி, மியன்மார், ரோஹிங்ய அகதிகள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்த ஐ.நா. சர்வதேச புகலிட கோரிக்கையாளர் தற்காலிக முகாமிற்கு முன்னால் அமைதியற்ற வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் அவர் கைது செய்யபட்டிருந்தார்.

கடந்த ஒக்டோபர் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் இன்று (10) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றினால் விடுதலை பிணையில் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்