யாழ் வரும் மைத்திரி – புறக்கணிக்கவுள்ள சம்பந்தன்?

யாழ்ப்­பா­ணத்­தில் நாளை நடை­பெற உள்ள தேசிய தமிழ் மொழித் தின விழா­வில் சிறீலங்கா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால கலந்­து­ கொள்­ள­வுள்ள நிலை­யில் அந்த நிகழ்வை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் புறக்­க­ணிப்பார் என்று தெரி­கி­றது.

கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் நிகழ்­வில் கலந்­து­கொள்­ள­மாட்­டார்­கள் என்­றும் கூறப்­பட்­டது. அவர்­க­ளில் சிலர் தாம் நிகழ்­வில் கலந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என்­பதை ஏற்­க­னவே தொலை­ந­கல் மூலம் அறி­வித்­து­விட்­ட­னர் என்­றும் உத­யன் அறிந்­தான்.

அநு­ரா­த­பு­ரம் சிறை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவர் ஈடு­பட்­டுள்ள நிலை­யில் அதற்கு ஒரு தீர்வை அரச தலை­வர் வழங்­கா­மல் இருப்­பதை அடுத்தே அவ­ரது நிகழ்­வைப் புறக்­க­ணிக்க சம்­பந்­த­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் முடி­வெ­டுத்­துள்­ள­னர் என்று தெரி­கி­றது.

எதிர்க் கட்­சித் தலை­வ­ரின் புறக்­க­ணிப்­புத் தொடர்­பில் பகி­ரங்­க­மான ஊடக அறி­விப்­புக்­கள் எவை­யும் விடுக்­கப்­ப­ட­வில்லை. எனி­னும் சனிக்­கி­ழமை யாழ்ப்­பாண நிகழ்­வுக்­காக அன்­றைய தினத்­தில் வேறு எந்த நிகழ்­வி­லும் கலந்­து­கொள்­வ­தைத் தவிர்த்து வந்த அவர், நேற்று அத்­த­கைய வேறு நிகழ்­வு­க­ளில் கலந்­து­கொள்­வ­தற்­குச் சம்­ம­தித்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு அறி­வித்­தி­ருந்­தார்.

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விவ­கா­ரம் தொடர்­பில் பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்­கித் தரு­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அரச தலை­வ­ரி­டம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. அதற்­கான நேர­மும் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

இதனை அடுத்தே அரச தலை­வ­ரின் நிகழ்­வில் கலந்­து­கொள்­ளா­மல் இருப்­பது என்­கிற இறுக்­க­மான முடிவை சம்­பந்­தர் எடுத்­தி­ருப்­பார் என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

நிகழ்­வில் தான் பங்­கேற்கமாட்­டார் என்­பதை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நேற்­றைய தினமே தொலை­ந­கல் ஊடாக அறி­வித்­தார் என்று அறிய முடிந்­தது.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஈ.சர­வ­ண­ப­வன் மற்­றும் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் ஆகி­யோர் இன்­றைய தினம் அறி­விக்­க­வுள்­ள­னர் என்­றும் அறி­ய­வந்­தது.

இதே­வேளை, அரச தலை­வ­ரின் வரு­கை­யை­யொட்டி தேசிய தமிழ்த் தின விழா நடை­பெ­றும் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி வளா­கத்­தைச் சுற்றி பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­கள் நேற்­று­மு­தலே போடப்­பட்­டுள்­ளன. ஆயு­தம் தாங்­கிய படை­யி­னர் காவ­லுக்கு நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்