பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியல்: மோடியின் புதிய இந்தியா 100-வது இடம்

உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினி அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 119 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து வடகொரியா, வங்கதேசம், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 97 வது இடத்தில் இருந்தது.

சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் பசி, பட்டினி பிரச்னையால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா(29), நேபாளம் (72), மியான்மர் (77), இலங்கை (84), வங்கதேசம் (88), பாகிஸ்தான் (106) ஆப்கானிஸ்தான் (107), வடகொரியா (93), ஈராக் (78) ஆகிய இடங்களில் உள்ளன. இந்தியாவில் ஐந்தில் ஒன்றுக்கும் அதிகமான, 5 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளின் உடல் எடை அவர்களின் உயரத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் பட்டினியில்லா நாடுகள் என்றும், சிறந்த வளரும் நாடுகள் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்