கல்முனையில் இரு குழுக்களிடையே மோதல் இளைஞர் உயிரிழப்பு

கல்முனையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, நேற்றிரவு 11 மணியளவில் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலம் கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் 32 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸார் தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்